நிலாத்துளி
இலைகளூடாக வழிய...
தென்றலின்
தெவிட்டாத விசிறல்
குளிருக்கு இதமாக...
எங்கோ
மழைகாலப்பட்சிகளின்
மயக்கும்
மதுர மிழற்றல்...!
ஆரவாரமில்லாமலே
அட்சதை தூவும்
வானத்து விண்மீன்கள்...!
நிலா இருட்டில்
கனதியாய் நீண்ட
மௌனம் ...
என்றாலும்
இந்த இனிய அமைதி
நிரந்தரமில்லை
என்ற சோகத்தோடு...
கோபமாய் சடசடக்கும்
துப்பாக்கி சூடுகள்...!
-தாட்சாயணி
No comments:
Post a Comment