மனதுக்குள் கொடிகொடியாய் இழைந்து
படுத்திருக்கும் நினைவுகள்..
மல்லிகைக் கொடியென எண்ணி
சுற்றிலும் படர்ந்த பாம்புகளாயும் சில
படர்வுகள்..
உதற நினைக்கும் மனம்
பாம்பெனும் பயம் கொண்டு...
சீ...போக மறுத்து பயம் காட்டி...
நெளிந்தபடி...
கொடியோடு கொடியாய்...
உதறிவிடும் வேளைகளில்
போனதாய் போக்குக்காட்டி...
பிறிதொரு வேளையில்
திடுக்குற்றுச் சிலிர்க்க வைத்து...
இருந்தாலும்,
உள்ளே சுருட்டிக்கொண்டு...
மல்லிகைப் பூப்பந்தாய்...
மனதை வருடி வருடி வரும் வாசம்
வருஷத்தில் நாலைந்தே தரமெனினும்...
சாகும் வரைக்கும் இந்த
மனதினின்றும் அகலாததாய்...
-தாட்சாயணி
No comments:
Post a Comment