ஒரு காற்றென
வழி மறித்து சொன்னாய்...
என்
காலங்களுக்குத்
துணையிருக்கப் போவதாய்..
என் காயங்களுக்குக்
கட்டிடப் போவதாய்...
என் கவிதைகளுக்குக்
கருவாகப் போவதாய்...
எந்த காலங்கள்...?
எந்த காயங்கள்...?
எந்தக் கவிதைகள்...?
எதுவுமே கேட்காமல்
சம்மதமாய் தலை அசைத்தேன்...
இப்போது உள்ளே
கனக்கின்றன கேள்விகள்...
எந்த காயங்களுக்கு துணையிருப்பாயென?
எந்த காயங்களுக்கு கட்டிடுவாயென?
எந்த கவிதைகளுக்கு கருவாகுவாயென?
ஒரு காற்றென
மீண்டும் நீ வழிமறிக்கையில்
கேட்கவேண்டும் உன்னிடம்...?
-தாட்சாயணி
No comments:
Post a Comment