மழை அதிரும் இரவு...
மௌனத்தைப் போர்க்க விரும்பிய
மனது...
அடை மழையுள்
ஆயுள் தீர்க்கக் கத்தும்
மாரி தவளைகள்
"உனது ஆயுளும் ஒரு நாள் தீரும்" என..
நீருள் விழுந்த
நிலவின் உடைவுகளென
உள்ளே பளபளக்கும்
உணர்வுகளின் உடைசல்கள்..
சரித்து கொட்டிய
குடநீராய்
வாசல் முழுவதும் வெள்ளம்
மன வெளி எங்கும் தான்..
-தாட்சாயணி
No comments:
Post a Comment