நீளமான இந்த இரவின்
முழுமைக்கும்
போதாது
மெழுகுவர்த்தியின் கீதம்…
உறங்காத விழிகளுக்குப்
போதாமலிருக்கிறது
அந்த நினைவுகளின் தடங்கள்…
ஒரு மணியிசையென காற்று
சலசலத்தோடுகிறது
இரவின்
விளிம்புகளைத் தடவிட…
மனதிடுக்குகளின்
தங்கிய
ஞாபகக்கசிவுகளில்
எங்கேனும்
அருமையாய் ஒரு
கவிதை பீறிடக் கூடும்.
அந்தக் கவிதைக்கெனவே
ஒற்றை ராத்திரியின்
மெழுகுச் சுடர் அலைதலும்…
உறங்காத விழிகளுள்
தவமிருக்கும்
அந்த நினைவுகளின் தடங்களும்…
-தாட்சாயணி
No comments:
Post a Comment