Tuesday, January 17, 2012

கூட வருதல்

போக மறுக்கிறாய் நீ
பிடிவாதமாய் என் கூடவே
வரவேண்டும் என்பதில்…
எழுதி வைத்த கவிதைகளுக்கிடையில் இருக்கும்
சில கிறுக்கல்கள் போல…
நடந்து போன சுவடுகளில்
தெரியாமலே தங்கியிருக்கும்
ரேகைகள் போல…
உறக்கத்துக்குள் அர்த்தப்படாமல்
எட்டிப்பார்க்கும் குட்டிக் கனவு போல
உனதின் வழியில்
என்னைப்பிரிக்காத
என் ‘விதி’யே…
காதலுக்குக் கூட இல்லாத
கரிசனையாய்
கடைசிவரைக்கும்
மரணத்தின் வாசலுக்கும்
அதற்கும் அப்பால்
என்னோடு வருதலில்
என்றும் தயங்காமல்
நீ…!
                                                        -தாட்சாயணி

No comments:

Post a Comment