Tuesday, January 10, 2012

மனதின் அழுக்கு

              மனதின் அழுக்கு

வெளியே திரளும்
சிரிப்பை நம்பி
ஏமாந்து விடக்கூடாதென்றுதான்
எப்போதும்
நினைக்கிறேன்…

எனினும்
சிரிப்புகள் வழியும்
உதடுகளுக்குள்
கருநஞ்சு
வளர்வதென்றால்
எங்ஙனம்
அதை நம்ப…?

சயனத்திலிருக்கும்
அவர்களின் விழியிடுக்குகளில்
பூளையென
வழிந்து ஒழுகுகிறது
மனதின் அழுக்கு!

           - தாட்சாயணி
          மல்லிகை 2011சித்திரை

No comments:

Post a Comment