தாட்சாயணியின் படைப்புக்கள்
Tuesday, January 10, 2012
வைரக்கற்கள்
இருப்பிலிருந்து தூக்கி
வெளியே எறியப்பட்டேன!
பல சொற்கள்
என்னைப் பந்தாடின!
பல சொற்கள்
என்னை நகையாடின!
எனினும் என் சொற்கள்
மௌனித்தேயிருந்தன!
என் சொற்கள் வைரக்கற்கள்…
ஒன்றையேனும் எடுத்து
நான் வெளியில்
எறிந்து விட முடியாது!
வெறுங்கற்களான
சொற்களை அவர்கள்
அப்படித்தான்
எறிவார்கள்…!
எனது சொற்கள்
வைரக்கற்கள்…
எப்படி ‘விசுக்’கென
எறிந்துவிட முடியும்!
அவற்றைப் பெறுவதற்கென்று
‘பண்பட்ட’ மனிதர்கள்
வருவார்கள்!
அதுவரைக்கும் அவற்றை
நானே
பத்திரப்படுத்துவேன்!
அவர்களிடம்தானே
என் வைரக்கற்களை
வைத்துக்கொள்ளக் கொடுப்பேன்!
-தாட்சாயணி
ஞானம் 2011பங்குனி
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment