தாட்சாயணியின் படைப்புக்கள்
Tuesday, January 10, 2012
தூக்கம்
போர்வைக்குள் உறைகிறது
தூக்கம்!
உள்ளே எழுந்து கூத்தாடி
தன்னை அனுமதி
என்று கத்தி
ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு
இப்போது அமைதியாய்
நாடகம் போடுகிறது!
வெளியில் பார்க்க
ஒரு சாது போல்தான்
இருக்கிறது!
இருந்தாலும்
இதற்கு முதல்
அதன் அட்டகாசத்தை
என்னவென்று சொல்வது…?
எடுத்த புத்தகத்தை
மூடித்தொலை என்று திட்டி…
சூழலைக் கிரகித்த
விழிகளைப்
‘படக்’கென்று அடித்துமூடி…
பாயைக் கொண்டுவா…
தலையணை வேண்டுமென்று
அடம்பிடித்து…
இப்போது ஒன்றுமே
தான் கேட்காததுபோல
அமைதியாய்க்
கிடக்கிறது
‘தூக்கம்’
-தாட்சாயணி
ஞானம் 2011பங்குனி
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment